Breaking News

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் திறப்பு - காணிக்கை வரவு ரூ.32.93 லட்சம்

காஞ்சிபுரம், செப்.19:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் 32,93,980 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


அத்திவரதர் புகழுக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயில். இக் கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் கடந்த 12.6.24 ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன.

இதில் ரொக்கமாக ரூ.32.93,980, தங்கம்}60 கிராமும்,வெள்ளி 230 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments

Thank you for your comments