காஞ்சிபுரத்தில் கணினி விற்பனையகத்திற்குள் பிடிபட்ட உடும்பு
காஞ்சிபுரம்,செப்.23:
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் இ.பாபு என்பவர் கணினிப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.இவரது கடைக்குள் உடும்பு ஒன்று வந்து விட்டதாக காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கணினி விற்பனையகத்திற்குள் அட்டைப் பெட்டிக்குள் மறைந்திருந்ததை லாவகமாக பிடித்து பாலாற்றுப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
No comments
Thank you for your comments