Breaking News

முன்னாள் பெண் ஆய்வாளர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிக்கை

காஞ்சிபுரம், செப்.22:

காஞ்சிபுரத்தில் முன்னாள் பெண் ஆய்வாளர் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை கள ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.





காஞ்சிபுரத்தில் பணி ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் கஸ்தூரி அவரது வீட்டில் மர்மமான முறையில் கடந்த மாதம் இறந்து கிடந்தார்.இது தொடர்பாக போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளாக காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளர் வளையாபதி(52)அதிமுக பிரமுகர் பிரபு(43) ஆகிய இருவரைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் வளையாபதி வேலூர் சிறையிலும்,பிரபு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலமில்லாததால் சிகிச்சையும் பெற்று வருகிறார்.இருவரும் காவல்துறையினரின் விசாரணையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இக்கொலை குறித்து காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் கள ஆய்வு செய்து அதன் அறிக்கையை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வெளியிட்டது.

அந்த அறிக்கையினை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் தி.ஹென்றி திபேன் வெளியிட்டு பேசுகையில் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கப் பட வேண்டும், வளையாபதி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட இடத்தை மனித உரிமை ஆணையம் பூட்டி சீல் வைக்க வேண்டும்,சித்ரவதை செய்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்க வேண்டும், இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.

கள ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகு,மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாசறை.செல்வராஜ்,மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை.சத்யா,சென்னை வழக்குரைஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments