Breaking News

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தயார் நிலையில் மருத்துவ குழுவினர்

காஞ்சிபுரம், செப். 13-

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்போருக்கு உடற்தகுதியை சோதிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியை கடந்த 10ம் தேதி அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். வரும் 23ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

இதில், 12 – 19 வயதுடைய பள்ளி மாணவ-மாணவியர், 17–25 வயதுடைய கல்லுாரி மாணவ-மாணவியர், 15 – 35 வயதுடைய பொது பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில், 27 விளையாட்டுகள் 53 வகை போட்டி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்போருக்கு உடற் தகுதியை பரிசோதனை செய்ய மருத்துவ குழுவினர் போதுமான அளவு மருந்து, மாத்திரைகளுடன் மருத்துவ முகாம் அமைத்துள்ளனர். 

மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது. , போட்டியில் பங்கேற்போருக்கு ஸ்நாக்ஸ் மற்றும் உடனடி சக்தி பெற குளுக்கோஸ் பானமும் வழங்கப்படுகிறது. என்றார்.

No comments

Thank you for your comments