Breaking News

சொக்கனூர் ஊராட்சி சட்டக் கல்புதூர் கிராமத்தில் 30000 லிட்டர் மேல்நிலைத் தொட்டியை எம்.எல்.ஏ செ.தாமோதரன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி சொக்கனூர் ஊராட்சி சட்டக்கல்புதூர் கிராமத்தில் 30,000 லிட்டர் மேல்நிலைத் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. அதனை முன்னிட்டு இன்று முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளருமான கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்  செ.தாமோதரன்         திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் மதுக்கரை ஒன்றிய கழக செயலாளருமான எட்டிமடை ஏ.சண்முகம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் சதீஷ்குமார் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments