கருவேப்பம்பூண்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் - ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (15.08.2024) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கருவேப்பம்பூண்டி ஊராட்சியில் 2023-2024 ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பதிவேட்டினை கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் அவர்கள் 33 தீர்மானங்கள் கிராம பொதுமக்கள் முன்பு வாசித்தார். தீர்மானத்தினை பொதுமக்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.ஹேமலதா ஞானசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, சின்ன காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துக்கொண்டு, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.
No comments
Thank you for your comments