Breaking News

கோவையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு

கோவை :

தமிழ்நாடு அனைத்து சத்துணவு,  அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு  சனிக்கிழமை(ஆக.10) அன்று கோவை, வரதராஜபுரம், சாய் விவாகா மஹாலில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் ந.இல.சீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மாநில மாநாட்டிற்கு தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில அமைப்பாளர் கே.பழனிசாமி தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் என்.அரங்கநாதன் வரவேற்று பேசினார்.


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்,   மாநில தலைவர் (பொறுப்பு ) சா.டேனியல் ஜெயசிங், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அ.மலர்விழி, மாநில பொருளாளர் ந.ஜேயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்க  மாநில பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி  சிறப்புரையாற்றினார். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முடிவில் கு.சத்தி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments