உணவு பதப்படுத்தும் மையத்தில் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆய்வு
காஞ்சிபுரம், ஆக.10:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் மையத்தில் வெள்ளிக்கிழமை வேளாண் வணிகத்துறை ஆணையர் ஜி.பிரகாஷ் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் முதன்மை உணவு பதப்படுத்துதல் மையம் ரூ.5.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது.
இம்மையத்தில் சுங்குவார்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மாம்பலங்கள்,காய்கறிகள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்கவும்,இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு அமைந்துள்ளது.
இம்மையத்தில் 10 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன அறை,2 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட ரூ3.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சேமிப்புக்கிடங்கு ஆகியனவற்றை வேளாண் வணிகத் துறை ஆணையர் ஜி.பிரகாஷ் ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு பயன் பெறும் வகையில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா.ஜீவராணி,பொறியாளர் துரைராஜ்,ஒழுங்கு முறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பழனி உட்பட வேளாண் அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments