Breaking News

கச்சி அநேக தங்காவதீஸ்வரர் ஆலயத்தில் உற்சவ சிலைகள் திருட்டு - 2 பேர் கைது.. சிலைகள் மீட்பு - சிவ காஞ்சி போலீசார் அதிரடி..

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் மேட்டு தெரு அருகே SSKV பள்ளி பின்புறம் அமைந்துள்ள கச்சி அநேக தங்காவதீஸ்வரர் ஆலயத்தில் உற்சவ சிலைகள் திருட்டு

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது சிவ காஞ்சி போலீசார் நடவடிக்கை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கைலாசநாதர் கோயில் மேட்டு தெருவில் SSKV பள்ளியின் பின்புறம் அமைந்துள்ளது கச்சி அநேக தங்காவதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.


இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி காலையில் வழக்கம் போல் கோவில் பூட்டிவிட்டு சென்ற நிலையில் அன்று காலை அவ்வழியாக சென்ற பக்தர் ஒருவர் கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவ காஞ்சி போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் கோவில் கருவறையில் இருந்த பித்தளையால் ஆன சிவன் மற்றும் பார்வதி சிலைகள் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் திருட்டு சம்பவம் நடைபெற்ற கோவிலில்  தடயங்களை சேகரித்து உற்சவர் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த பொழுது இரண்டு நபர்கள் கோவிலை நோக்கி செல்வதாக சிசிடிவி கட்சியில் பதிவாகி இருந்த நிலையில் போலீசார் இருவரையும் கடந்த நான்கு நாட்களாக தேடி கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்  புதுப்பாளையம் தெரு பகுதியை சேர்ந்த குமரேசன் (32), சிறுக்காவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29) என தெரிய வந்தது, 

இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பித்தளை சிவன் மட்டும் பார்வதி சிலையை திருடி சிறுகாவேரிபாக்கம் முனிஸ்வரன் கோவில் அருகில் உள்ள குட்டையில் மறைத்து வைத்திருப்பதாக ஒரு இடம் காவலர்கள் சென்று அங்கிருந்த சிவன் மற்றும் பார்வதி சிலை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர், 

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் காவலர்கள் குற்றவாளையும் சிலையையும் காட்சி படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார். 

இரு குற்றவாளிகளையும்  நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி சிறையில் அடைத்தனர், 

பிரபல சிவன் கோவில் உற்சவர் சிலை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக காவலர்கள் துரிதமாக மேற்கொண்டு குற்றவாளிகளை பிடித்து சிலையை மீட்கப்பட்டது பெரும் பக்தர்களை மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments

Thank you for your comments