மருதூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை !
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஒன்றியம், மருதூர் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் அவர்களின் தலைமையில் ஐ.டி.சி நிறுவனம் சார்பில் ஆர்.டி.டிரஸ்ட் மூலமாக ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் ரங்கநாதன், சித்ரா, கிளை செயலாளர் தங்கவேல், ராஜமாணிக்கம், மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், சத்துணவு ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments