காஞ்சிபுரத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நல திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், உயர் கல்வி கற்க தமிழ் புதல்வன் திட்டம் இன்று தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், உத்திரமேரூர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு 500 மாணவர்களுக்கு வங்கி அட்டை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய அமைச்சர் அன்பரசன், மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் தடைபடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் தமிழக அரசு தமிழ் புதல்வன் திட்டத்தை கொண்டு வந்ததாகவும், உயர்கல்வி தங்கு தடை இன்றி கற்கும் வகையில் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் பெரும் வரவேற்பை அளித்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் இன்று முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் வர வைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 78 கல்லூரிகளில் பயிலும் 6,194 மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுவார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, பேரூராட்சித் தலைவர் ஞானசேகரன் மற்றும் மாணவர்கள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments