பிரபல நடிகை ரம்பா தனது மேஜிக் ஹோம் நிறுவனத்தின் 2வது மையத்தை கோவையில் திறந்துவைத்தார்
கோயம்புத்தூர் மேஜிக் ஹோம் வட அமெரிக்காவில் வீட்டு உள் அலங்கார துறையில் முன்னோடியான நிறுவனமாக இருப்பதுடன், இந்தியாவில் தனது விரிவாக்க முயற்சியில் கோயம்புத்தூரில் இரண்டாவது வீட்டு உள் அலங்கார ஷோரூமைத் தொடங்கியுள்ளது.
திருச்சி ரோட்டில் அமைந்துள்ள இந்த மையத்தை அதன் பிராண்டின் உரிமையாளரான நடிகை ரம்பா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு, 8 மொழிகளில் 130 படங்களில் நடித்த ரம்பா, இப்போது இந்தியாவில் மேஜிக் ஹோம் என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தன் வெற்றிகரமான நடிகை வாழ்க்கையிலிருந்து புதிய படைப்பாற்றல் துறைக்கு மாறி, இன்டீரியர் வடிவமைப்பு மீது உள்ள அவரது ஆர்வம், இந்த புதிய அத்தியாயத்திற்கான உந்துதலை வழங்கியுள்ளது.
Magick Home நிறுவனம், உலகளாவிய அளவில் பாராட்டப்பட்ட மாடுலர் கிட்சன், படுக்கையறைகள், குளியலறைகள் மற்றும் பர்னிசர்ஸ் உள்ளிட்ட வீட்டு உள் அலங்காரங்களுக்கு பிரத்யேகமாக வடிவமைத்து வழங்குகிறது.
உலக சந்தையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள Magick Home நிறுவனத்தின் தொகுப்புகள், அழகிய வடிவமைப்புகளையும் பயன்மிக்க செயல்பாடுகளையும் சுலபமாகக் வழங்குவதுடன், இதன் மூலம் வீட்டின் உள் அலங்காரத்தை எளிமையாகவும் மற்றும் விருப்பமான பட்ஜெட்டிலும் வழங்குகிறது.
தொடக்க விழாவில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரம்பா மற்றும் மேஜிக் ஹோம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான இந்திரகுமார் பத்மநாதன் கூறியதாவது, மேஜிக் ஹோம் நிறுவனம் இந்தியாவில் வீட்டு உள் அலங்காரங்களில் புதிய வரையறையை உருவாக்குகிறது. கோயம்புத்தூரில் தொடங்கியுள்ள எங்கள் கிளை, எங்கள் முழுமையான இலக்கை நோக்கி ஒரு சிறிய படியாகும்.
மேலும், எங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விரிவாக்கத் திட்டத்துடன், ஒரே கூரையின் கீழ் முழுமையான உள் அலங்கார அனுபவத்தை வழங்கும் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நாங்கள் விரைவில் பர்னிசர்ஸ் மற்றும் வீட்டு அலங்கார துறைகளிலும் நுழைய இருப்பதை பெருமையாக அறிவிக்கிறோம்.”
No comments
Thank you for your comments