காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி பயிற்சி முகாம்
படவிளக்கம் : முதலுதவி செய்யும் முறை குறித்து பயிற்சி முகாமில் செய்து காட்டிய மருத்துவர்கள்.
காஞ்சிபுரம், ஜூலை 6-
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆருயிர் ஜீவன் அனைவருக்கும் உயிர் காப்போம் என்ற அடிப்படை முதலுதவி பயிற்சி முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதனையாட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் முதலுதவி பயிற்சி முகாம் இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.கிளையின் செயலாளர் தன்யக்குமார், இணைச் செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவர் விக்டோரியா வரவேற்று பேசினார்.
தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். முதலுதவி செய்வது எப்படி என்று செயல்முறை விளக்கங்களுடன் மருத்துவரும், பேராசிரியருமான ஞானகணேஷ் செய்து காட்டினார்.
மருத்துவர் ஆதிரை நன்றி கூறினார்.பயிற்சி முகாமில் அரசு செவிலியர் பயிற்சி மாணவியர்கள், ஆசிரியைகள் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments