Breaking News

238 பயனாளிகளுக்கு ரூ.40,94,280/-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாவட்டம்,  திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், 238 பயனாளிகளுக்கு ரூ.40,94,280/-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (06.07.2024) நடைபெற்ற 1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், 238 பயனாளிகளுக்கு ரூ.40,94,280/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் 14.06.2024 முதல் நடைபெற்றன. திருப்பெரும்புதூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், திருப்பெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த  பொதுமக்கள்  அளித்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு,  இலவச வீட்டுமனை பட்டா 68 பயனாளிகளுக்கும், முழு புலம் பட்டா 63  பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா 43 பயனாளிகளுக்கும், புல வரைபடம் திருத்தம் 4 பயனாளிகளுக்கும் மற்றும் வட்டார வழங்கல் அலுவலகம் மூலமாக (TSO) 60 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 238 பயனாளிகளுக்கு ரூ.40,94,280/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன எனவும், இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, பயனடைந்த அனைவருக்கும் வாழ்த்துகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், பேரூராட்சித் தலைவர் திருமதி.ச.சாந்தி, திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் திரு.சதீஷ்,  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments