Breaking News

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து



சென்னையில் கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்த கண்டித்து தமிழகம் முழுவது அரசியல் கட்சியினர் வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தால் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் E.L.கண்ணன் திருப்பதி முரளி .கிருஷ்ணன் G.கருணாநிதி,  L.அருள், A.கார்த்திக், G.கார்த்திகேயன் சிட்டிபாபு, D.வெங்கட்ராமன்,   K.பிரபாகரன், K.கதிரவன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மூன்று சங்கங்களின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments