Breaking News

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 9-

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அலுவலக முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கோவை மண்டலம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து வரும் நாட்களில் கள்ளச்சாராய மரணங்களை தவிர்த்தும் கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தியும் கோரிக்கை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கோவை மண்டலம் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் குறிப்பாக கள்ளச்சாராய மரணங்களை தவிர்த்திட வேண்டும் என்றும் கள்ளுக்கடைகளை திறப்போம் என்றும் சுதேசியை கடைபிடிக்க வேண்டும். மற்றும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில பொதுச் செயலாளர் கே சி ராஜா, தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கோவை மண்டல தலைவர் நெல்லை பரணி  சுதர்சன், முன்னிலை வகித்தார். 

கோவை மண்டல செயலாளர் பாலகிருஷ்ணன் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் இடையர்காடு பாஸ்கர், கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.ஏ.ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கிஷோர், தெற்கு மாவட்ட செயலாளர் சேர்மக்கனி, மேற்கு மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாநகரச் செயலாளர் சுரேஷ் குமார் பாண்டியன் கோவை மண்டல இளைஞரணி தலைவர் விஜயகுமார் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் மண்டல துணைத் தலைவர் வி.ஜி.மணி, மாநிலத் துணைத் தலைவர் தங்கசாமி மாநில செயலாளர் வேதநாயகம்,  திருப்பூர் மாவட்ட தலைவர் ஆத்திச் செல்வன், கரூர் மேற்கு மண்டல தலைவர் முருகேசன் மாவட்ட தலைவர் சக்திவேல் ஈரோடு மாவட்ட மாநில செயலாளர் சுரேஷ்குமார் மாவட்ட தலைவர் முருகன் உட்பட திருப்பூர் ஈரோடு கோயமுத்தூர் கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கள்ளச்சாரயத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

No comments

Thank you for your comments