Breaking News

காஞ்சிபுரம் அரசு பள்ளிகளில் கார்கில் போர் வெற்றி தினம் அனுஷ்டிப்பு

காஞ்சிபுரம்,  ஜூலை 26:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர்,பிச்சிவாக்கம்,மதுரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தியாகம் போற்றுவோம் அமைப்பின் சார்பில் கார்கில் போர் வெற்றி தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.



காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தியாகம் போற்றுவோம் அமைப்பின் சார்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக 25 வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

பரந்தூர் அரக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமர்ஜவான் எனப்படும் அழியாவீரர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அனைத்து மாணவ,மாணவியர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தினார்கள்.

தியாகம் போற்றுவோம் அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி இந்தியாவை வெற்ற பெறச் செய்த தியாகங்கள் பள்ளி மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு கார்கில் போர் நினைவு தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு அப்போட்டிகளில் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.பரந்தூரில் நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

பிச்சிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார்.

ஏற்பாடுகளை தியாகம் போற்றுவோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ச.முரளி, பார்த்தீபன், மாணவி பிருந்தா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments