ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கைது
காஞ்சிபுரம், ஜூலை 26:
காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் வீட்டு மனைப் பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல்.இவருக்கு அரசின் சார்பில் வழங்கிய இலவச வீட்டு மனைப் பட்டாவை கிராம கணக்குப் பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை(42)அணுகியுள்ளார்.
அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் ரூ.15 ஆயிரம் தருவதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அந்தப்பணத்தை திருமுக்கூடல் அருகே சாலவாக்கம் சாலையில் குமரவேலை வரச்சொல்லி லஞ்சப் பணத்தைப் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீஸôôல் கைது செய்யப்பட்டார்.
பின்னர் திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வே.கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தினார்கள்.
No comments
Thank you for your comments