காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவர்கள் தின விழா
படவிளக்கம் : தேசிய மருத்துவர்கள் தின விழாவினை தொடக்கி வைத்து பேசுகிறார் முதல்வர் ராஜசேகர்
காஞ்சிபுரம், ஜூலை 1:
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவர்கள் தின விழா அக்கல்லூரியின் முதல்வர் ராஜசேகர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தின விழா அக்கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
துணை முதல்வர் முத்துலட்சுமி, நிலைய மருத்துவர் ராதா,பேராசிரியர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவர் பரிமளா வரவேற்றார். சென்னை அப்பல்லோ மருத்துவக்கல்லூரி குடல் நோய் சிறப்பு மருத்துவர் பாசுமணி நோயாளிகளை கனிவுடன் கவனிக்க வேண்டும் என்றும்,மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் பூபதி மாணவர்கள் மருத்துவ அறிவை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் பேசினார்கள்.
விழாவில் மருத்துவக்கல்லூரியின் சிறுநீரக அறுவைச் சிகிச்சை பேராசிரியர் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டது.மருத்துவ மாணவர்கள் பலரும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.நிறைவாக துணை முதல்வர் ஈஸ்வரி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments