Breaking News

கூடுதலாக நெல் அரவைக்கு வழங்க வேண்டும் - கலெக்டரும் நிர்வாகிகள் கோரிக்கை மனு

 காஞ்சிபுரம் : 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை முகவர்கள் சங்கம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் தலைவர் டி பாபு செயலாளர் சுந்தரவரதன் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  


அதில் கூறி இருப்பதாவது,  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை முகவர்களாக உள்ளோம். 120- கோடி நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவை முகவர்களாக உள்ள எங்களுடைய ரைஸ் மில்கள் மாதாந்திர அரவைத் திறன் 23,500 மெட்ரிக் டன் ஆகும். 

இப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவைத் திறனுக்கு ஏற்ப வழங்காமல் 10,000 டன் 40 சதவீதம் நெல் மட்டுமே வழங்கிவிட்டு மீதி உள்ள நெல்லை மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

இதனால் மாதத்திற்கு 15 நாட்களுக்கு  மட்டுமே  வழங்குகிறார்கள்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. 7- மாதங்கள் மட்டுமே ஆலை இயங்குகிறது.

இதனால் மாதத்தில் 15 நாள் மட்டுமே அரிசி ஆலைகளை இயங்குவதால்  ஆட்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் போகிறது. ஒவ்வொரு அரிசி அளவையும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. 

23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இதை நம்பி தான் ஒவ்வொரு அரிசி ஆளையும் சுமார் 4 கோடி 10- கோடி வரை வங்கி கடன் மூலம் பெற்று செரிவூட்டப்பட்ட  இயந்திரம், கருப்பு நீக்கம் எந்திரம் என அமைத்துள்ளோம். 

ஆகவே தொடர்ந்து நாங்கள் தொழில் செய்யும் வகையில் தொடர்ந்து எங்களுக்கு கூடுதல்  நெல் அரவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

No comments

Thank you for your comments