மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் நிதிநிலையில் அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்துக் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் -5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்க்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்காமல் வஞ்சித்துள்ளது.
இதனைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிதிநிலை ஒதுக்க மறுத்த தமிழகத்தை வஞ்சித பாசிச பாஜக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி கண்டண முழக்கங்களிட்டனர்.
No comments
Thank you for your comments