Breaking News

மக்களுடன் முதல்வர் முகாமை எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிற்கு உட்பட்ட மேனல்லூர் கிராமத்தில் மக்களுடன் முதல்  முகாமை எம் எல் ஏ க‌.சுந்தர் துவக்கி வைத்தார்.  ஒட்டனங்கள் ஊராட்சி அரசாங்கம் ஊராட்சி பெனலூர் ஊராட்சி அம்மையப்பன்நல்லூர் ஊராட்சி மேனலூர் ஊராட்சி ஆகிய கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக வழங்கினார் ஏராளமான மனுக்கள் மீது உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சான்றிதழ்களையும் வழங்கினார் 


மின் இணைப்பு பட்டாவில் பெயர் மாற்றம் சொத்து வரி மேலாண்மை துறை மருத்துவம் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெற்றனர் 

மேலும் இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஒன்றியபெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் சாலவாக்கம் குமார் ஒன்றிய துணை செயலாளர் சுகுணா சுந்தர்ராஜன் ருத்ரகேட்டி என்ற தயாளன் பேரூராட்சிசெயலாளர் பாரி வள்ளல் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்  ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கிருஷ்ணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வடிவுக்கரசி செந்தில்வேலன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments