சனா மாடெல் பள்ளி வளாகத்தில், டெங்கு எதிர்ப்பு மாதம் மற்றும் விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த பூந்தமல்லி சுகாதார மாவட்டம், காட்டுபாக்கம் துணை சுகாதார நிலையத்தில் உள்ள சனா மாடெல் பள்ளி வளாகத்தில், டெங்கு எதிர்ப்பு மாதம் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர் ஜே.பிரபாகரன் DHO, Dr. பிரதீபா BMO, ஆனந்த் JE (இளநிலை பூச்சியியல் வல்லுநர், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர்.
இந்நிகழ்வில் 650 மாணவ மாணவியர் கலந்து கொண்டு,டெங்கு பரவும் விதம் பற்றியும், தடுப்பு நடவடிக்கை பற்றியும் அறிந்து கொண்டனர்.மேலும் கண்காட்சி மூலம் டெங்கு முட்டை,லார்வா, பியூப்பா, முதிர் கொசு பற்றி நேரடியாக பார்த்து அவர்கள் சந்தேகங்களை தெளிபடுத்திக்
கொண்டனர்.இறுதியாக பள்ளி தாளாளர் முன்னிலையில் டெங்கு உறுதிமொழி எடுத்த பின்னர் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
பயனுள்ள இந்த தகவலை எங்கள் வீட்டின் அக்கம் பக்கம் உள்ள உறவுகளுக்கு தெரியப்படுத்தி டெங்கு இல்லாத சூழ்நிலை கொண்டுவர முயற்சி செய்வதாக அனைத்து மாணவர்களும் சுகாதார துறைக்கு நன்றி கூறி தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments