Breaking News

மழை நீர் கால்வாய் அடைப்பை நீக்க கோரிய ஊராட்சி மன்ற துணை தலைவர் மீது காவல் நிலையத்தில் பொய் புகார்




செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, பாப்பா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். 

இந்த நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாயை அதே பகுதியில் வசிக்கும் மேரி மேக்சி என்பவர் மணல் முட்டை கொண்டு அடைத்து விட்ட காரணத்தால் தண்ணீர் செல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பன்னீர் செல்வத்திடம் தெரிவித்த நிலையில் மழை நீர் கால்வாய் அடைப்பை அகற்றுமாறு ரோஸ்மேரி குடும்பத்தினரும் தெரிவித்து நிலையில் அவர்கள் பன்னீர் செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.மேலும் ரோஸ்மேரியிடம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தகாத முறையில் நடந்து கொண்டார் என உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகார் குறித்து உத்திரமேரூர் போலீசார் அழைத்த நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.அங்கே உத்திரமேரூர் போலீசார் நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் மேரிமேக்சிக்கு சாதகமாகவே விசாரணை செய்து கொண்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து,பொய் புகார் அளித்துள்ள மேரிமேக்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்திரமேரூர் போலீசார் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளாமல் நியாயமான முறையில் விசாரணையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

No comments

Thank you for your comments