Breaking News

தமிழக அரசுக்கு எதிராக விசிக கண்டன முழக்கங்கள்...

  • பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்-ன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
  • அஞ்சலி செலுத்திய விசிக-வினர் வீரவணக்க முழக்கங்களை எழுப்பி நடப்பது சட்டத்தின் ஆட்சியா இல்லை. ரௌடிகளின் ஆட்சியா என கண்டன முகங்களை எழுப்பினர்.



பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்த் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னையில் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்தும், சில அரசியல் கட்சித் தலைவர்கள் நேரிலும் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மதி ஆதவன் தலைமையில் இரட்டை மண்டபம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்-கிற்கு வீரவணக்க முடக்கமிட்டும் தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு இத்தகைய நிலை என்றால் தமிழக மக்களுக்கு நிலை என்ன எனவும் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா ரௌடிகளின் ஆட்சி நடக்கிறதா என கேள்வி எழுப்பி தமிழக அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

No comments

Thank you for your comments