Breaking News

தலைக்கவசம் அணிந்தால் பெரும்பாலான விபத்துகள் குறைந்து விடும் - மோட்டார் வாகன ஆய்வாளர் பேச்சு

காஞ்சிபுரம், ஜூலை 6:

தலைக்கவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனங்களை ஓட்டினால் பெரும்பாலான விபத்துகள் குறைந்து விடும் என போக்குவரத்துத்துறையின் வட்டார ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் சனிக்கிழமை பள்ளி மாணவர்களிடையே பேசினார்.


காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தாளாளர் தா.வித்யா சங்கர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 

பள்ளியின் துணை முதல்வர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களை திரையிட்டுக் காட்டி பேசியது..

இந்தியாவில் தான் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.அதிலும் தமிழகம் கடந்த 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முதலிடத்தில் இருக்கிறது.இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டும் இளைஞர்களால் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன.

அதிலும் முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவதே முக்கிய காரணமாக இருக்கிறது. உடலில் வேறு எந்த இடத்தில் காயம் ஏற்பட்டாலும் பிழைத்துக் கொள்ள வழியிருக்கிறது.ஆனால் தலைக்காயம் ஏற்பட்டு விட்டால் பிழைப்பதும் கடினம்,அதே நேரத்தில் செலவும் அதிகம்.

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம்,சிறார்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள், இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்வதால் ஏற்படும் விபத்துகள், பாதசாரிகள் சாலையை கடக்கும் முறைகள்,கார்களில் செல்பவர்கள் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் ஆகியன குறித்தும் குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: பள்ளி மாணவர்களிடையே சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசுகிறார் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம்

No comments

Thank you for your comments