Breaking News

காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்கள்.

காஞ்சிபுரம், ஜூலை 1:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பொதுமக்களிடமிருந்து 548 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.



படவிளக்கம் : குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்


No comments

Thank you for your comments