திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் தில்லை மெடிக்கல் சென்டர் புதிய உதயம்
திருச்சி :
திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் மூன்றாவது மெயின் ரோட்டில் புதிதாக தில்லை மெடிக்கல் சென்டரை நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த தில்லை மெடிக்கல் சென்டரில் பிசியோதெரபி, இரத்தப் பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, மருந்தகம், வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் மருத்துவ ஆலோசனை வசதியும் உள்ளது.
மேலும் மாதந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் மெடிக்கல் சென்டரின் உரிமையாளரும் மருத்துவருமான ரோஷன் ராஜ் தென்கொரியா நாட்டில் அனைத்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு பயிற்சி முடித்து கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியிலும், திருச்சியில் சில சிறப்பு மருத்துவமனைகளிலும் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்த அனுபவம் பெற்றவர்.
மேலும் சென்டரில் பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர் ராமநாதன், தோல் நோய் சிறப்பு மருத்துவர் விக்னேஷ் குமார் மற்றும் சில சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர் என்பது தில்லை மெடிக்கல் சென்டரின் சிறப்பு அம்சமாகும்.
இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், பொன் நகர் பகுதி செயலாளர் ராமதாஸ், தில்லை மெடிக்கல்ஸ் மனோகரன், ஜானகி மனோகரன், டாக்டர் ரோஷன் ராஜ், கீதாஞ்சலி ரோஷன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments