Breaking News

காஞ்சிபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா



படவிளக்கம்: விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கிய சர்வதேச வேளாளர் சங்க நிறுவனர் ஜெ.எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்


காஞ்சிபுரம், ஜூலை 14:

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளர் சமூதாய நல சங்கம் சார்பில் அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளர் சமுதாய நல சங்கம் சார்பில் காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சங்க தலைவர் வி.கே.குமரசேசன் தலைமை வகித்தார். கௌரவத்தலைவர் என்.கே.ஞானசேகரன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.சர்வேசன், பொருளாளர் ஆர்.பாலாஜி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க செயலாளர் பூ.சு.சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.

விழாவில் சங்கத்தின் சர்வதேச வேளாளர் சங்க நிறுவனர் ஜெ.எஸ்.ராஜ்குமார், கு.பா.ரவீந்திரன் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற சமுதாய மாணவ,மாணவியர்க்கு நினைவுப்பரிசுகளையும், ரொக்கப்பரிசும் வழங்கினார்கள். 

விழாவில் பங்கேற்ற மாணவ,மாணவியர்களுக்கு வருங்காலத்தில் கல்வி ஆலோசனைகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சோலையப்பன், ராணிப்பேட்டை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க நிர்வாகி ஆர்.மணி ஆகியோர் உட்பட சங்க நிர்வாகிகள்,பரிசு பெற்ற மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments