காஞ்சிபுரம் அருகே தெருநாய் கடித்து சிறுவன் காயம், காப்பாற்ற முயன்ற தந்தையும் காயம்
காஞ்சிபுரம், ஜூன் 27:
காஞ்சிபுரத்தை அடுத்த பல்லூரில் வியாழக்கிழமை சிறுவனது வாய்ப்பகுதியில் தெருநாய் கடித்து குதறிய போது காயமடைந்த தன் மகனை காப்பாற்ற முயன்ற தந்தையும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த பல்லூரில் கணபதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி.இவரது மகன் நிர்மல்ராஜ்(5)வீட்டு வாசல் முன்பாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற தெருநாய் ஒன்று சிறுவனின் வாய்ப்பகுதியில் கடித்து குதறியது.
உடனடியாக அதைப்பார்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை காப்பாற்ற முயன்ற போது அவரது இடது காலிலும் கடித்து விட்டு தப்பி ஓடியது. தெருநாய் கடித்ததில் காயமடைந்த தந்தையும் மகனும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
No comments
Thank you for your comments