காஞ்சிபுரம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
காஞ்சிபுரம், ஜூன் 28:
காஞ்சிபுரம் அருகேவெங்கடாபுரம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் திடீரென தீப்பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்புத்துறையினர் வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் தேநீர் மற்றும் பிஸ்கட் வியாபாரம் செய்து வருபவர் சிங்காரவேல், இவர் தனது காரில் அட்டைப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு செவிலிமேட்டிலிருந்து கீழம்பி செல்லும் சாலையில் வெங்கடாபுரம் என்ற இடத்தினருகே சென்று கொண்டிருந்த போது தீடீரென காரின் பின்புறம் தீப்பிடித்து எரிந்தது.
காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தி விட்டு அவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
காரின் உரிமையாளர் சிங்காரவேல் அதிஷ்டவசமாக உயிர்தப்பியதோடு காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸôரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments