குன்னத்தூர் ஊராட்சியில் வரும் முன் காப்போம் கலைஞரின் இலவச மருத்துவ முகாம்
கோவை :
இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கீதா தங்கராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இம்முகாமிற்கு கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, வட்டார சுகாதார மருத்துவர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், மண்டல வளர்ச்சி அலுவலர் ஷியாம், ஊராட்சி செயலர் ஈஸ்வரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் அன்னூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் மு.தனபாலன் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருத்துவ பெட்டகம் வழங்கினார்.
இதில் ஊராட்சிக்குட்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் செய்து கொண்டார்கள்.
மேலும் இந்த முகாமில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு தமிழக முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சை உள்பட மேல் சிகிச்சைக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சிவசக்தி சமூக சேவை நிறுவனர் தங்கராஜ் செய்திருந்தார்.
No comments
Thank you for your comments