Breaking News

3.50 லட்சம் சிலைகள் மீட்கப்பட்டு சென்னை, தஞ்சாவூர் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளது - பொன் மாணிக்கவேல்

திருச்சி திருவானைக்காவல் சுமங்கலி மஹாலில் தமிழக ஆன்மீக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்துகொண்டு கூறியதாவது, 

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் இதுவரை மீட்கப்பட்டு சென்னை, தஞ்சாவூர் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

அந்த சிலைகளை அளவெடுத்து ஆவணப்படுத்தி அந்தந்த கோயில்களில் வழிபாட்டுக்காக அனுப்பி வைக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்தம் அரசு இதுவரை அதை செயல்படுத்தவில்லை. 

தொல்லியல் துறையை அரசு செயல்படாமல் தடுத்து வைத்துள்ளது. அறநிலையத்துறையின் மூலம் அனைத்து செயல்களையும் செய்து வருகிறது. 

கோவில் சொத்துக்களில் கை வைக்கக் கூடாது அது கேடு தரும். 6000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறோம் என்று அரசு கூறி சிதிலமடைந்த அடைந்த பல கோயில்களை பராமரிப்பின்றி அப்படியே விட்டுள்ளது. 

தமிழகத்தில் 35,000 கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அரசு வைத்துள்ளது. இந்த கோயில்களில் தினம் 14 ரூபாய் கூட வருமானம் கிடையாது என்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களில் பூசாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவது கூட கிடையாது. 

பழுதடைந்த பல கோயில்களை அறநிலையத்துறை சீரமைக்க வேண்டும் ஆனால் இந்த அரசு மவுனம் காத்து வருகிறது. சிலைகள் தொடர்பாக ஆன்மீக அன்பர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து கோர்ட்டுக்கு செல்ல இருக்கிறோம். 

இந்தியாவில் இருந்து  2262 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் 1414 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 

வாஷிங்டனில் மியூசியத்தில் பல சிலைகள் இன்னும் இருக்கின்றது. இவற்றை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை மேற்கண்ட தகவல்களை முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments