காஞ்சிபுரம் அருகே அவளூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா
படவிளக்கம் : விழாவில் பேசுகிறார் அவளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி
காஞ்சிபுரம், ஜூலை 2:
காஞ்சிபுரம் அருகேயுள்ள அவளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 100 வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே அவளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இதனையொட்டி அக்கிராம மக்கள்,பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் பலரும் இணைந்து நூற்றாண்டு விழாவை பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடினார்கள். உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் எல்கேஜி அடிப்படைக்கவ்வியை கற்கும் மாணவர்களுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கற்றல்திறனை சிறப்பாக மேம்படுத்தி வருகின்றனர். அரசும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க 14 வகையான கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டார்.
விழாவிற்கு காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி,துணைத்தலைவர் திவ்யா இளமது,வட்டாரக்கல்வி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியை பத்மாவதி வரவேற்று பேசினார்.
திமுக தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் குமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கரி குமார்,ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments