Breaking News

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார் ஆட்சியர் கலைசெல்வி மோகன்


 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (15.07.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 381 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று  நடைபெற்ற  வாராந்திர மக்கள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில்,  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில்  மாவட்ட   வருவாய்   அலுவலர்  திரு.செ.வெங்கடேஷ்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சு.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments