நடுவீரப்பட்டு ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மே 06, 2022 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15.09.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் முதற்கட்டமாக கிராமப்புறம் (ம) நகர்ப்புறங்களில் தொடங்கப்பட்டு 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
2023-2024 ஆம் ஆண்டுக்கான மாநில சட்டமன்ற பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18.54 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ”முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்” விரிவுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ரூ. 539.88 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் 2023-24 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் 5 வட்டாரங்கள் மற்றும் 3 பேரூராட்சிகளில் இத்திட்டமானது பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், திருப்பெரும்புதூர் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 5 வட்டாரங்களில் உள்ள 414 பள்ளிகள் மற்றும் வாலாஜாபாத். உத்திரமேரூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 24 பள்ளிகள் ஆகமொத்தம் 438 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இத்திட்டத்தின் மூலம் 438 பள்ளிகளில் 27,354 பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரகப்பகுதிகளில் 414 பள்ளிகளில் 594 சமையலர்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் 34 ஆக மொத்தம் 628 சமையலர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பணிபுரிந்து பயனடைந்துள்ளனர்.
2023-24 ஆம் ஆண்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாட்டிற்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.111.80 இலட்சம், பள்ளிகளில் பணிபுரிந்த சமையலர்களுக்கான மதிப்பூதியம் ரூ. 137.96 இலட்சம், ரவை மற்றும் கோதுமை விநியோகம் செய்ததற்கு காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு (JR Cooperative) நிதி ரூ.47.33 இலட்சம் மற்றும் அரிசி, துவரம் பருப்பு, உப்பு (ம) எண்ணெய் விநியோகம் செய்த்தற்கு காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு (TNCSC) நிதி ரூ.90.11 இலட்சம் ஆக மொத்தம் ரூ.387.20 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களில் ஊரக பகுதிகளிலுள்ள அனைத்து நிதி உதவி பெறும் 3992 துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 240586 மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று தொடங்கப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தயாரிக்க தேவையான பாத்திரங்கள், இதர சாமான்கள் வாங்குவதற்கும் மற்றும் எரிவாயு உருளை (Cylinder) வைப்புத்தொகைக்காக ரூ.9.06 கோடி 37 மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ஊரக பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், நடுவீரப்பட்டு ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, மாணவ/மாணவியர்களுக்கு உணவு பரிமாறி, மாணவ/மாணவியர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், திருப்பெரும்புதூர் மற்றும் உத்திரமேரூர் ஆகிய 5 வட்டாரங்களில் உள்ள 31 ஊராட்சிகளில் 33 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 2,125 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். மாநிலம் அளவில் இதுவரை 31008 பள்ளிகளில் 18.54 இலட்சம் மாணவர்களும், தற்போது 3992 பள்ளிகளில் 240586 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments