கல்வி கடன் மேளா - கல்லூரிகளில் விழிப்புணர்வு - ஆட்சியர் ஆலோசனை
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கல்வி கடன் மேளா நடத்துவது குறித்தான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று (12.07.2024) கல்வி கடன் மேளா நடத்துவது குறித்தான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலமாக கல்வி கடன் பெற மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "Vidhyalakshmi Portal" (www.vidhyalakshmi.co.in) குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி கடன் மேளா நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை மூலமாக அறிவுரைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து "Vidhyalakshmi Portal" குறித்த பதிவுமுறைகளை எடுத்துரைத்ததோடு அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று "Vidhyalakshmi Portal" குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 22.11.2023 அன்று மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், பென்னலூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கடன் மேளா விழாவில் சுமார் 112 மாணவ / மாணவியர்களுக்கு ரூ.13.19 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து வங்கிகளின் சார்பில் மீண்டும் சிறப்பு கல்வி கடன் முகாம் 15.02.2024 அன்று காஞ்சிபுரம் வட்டம், கீழம்பி கிராமம், தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி இரண்டு முகாம்களின் மூலம் சுமார் 82.79 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 2024ம் ஆண்டில் "Vidhyalakshmi Portal" மூலம் கடனுதவி பெற 3000 மாணவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சுமார் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ் இலக்கினை எய்தும் வகையில் "Vidhyalakshmi Portal" குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நான்கு கல்லூரிகளுக்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கண்காணிப்பு அலுவலர்கள், கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் இன்று மாவட்ட ஆட்சியர் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் "Vidhyalakshmi Portal" குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இணையதளத்தில் பதிவுமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது,
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், வங்கி அலுவலர்கள், கல்வி நிலையங்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments