Breaking News

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

படவிளக்கம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞர்கள்

காஞ்சிபுரம், ஜூலை 9:

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக காஞ்சிபுரம் பார் அசோசியேஷன்,காஞ்சிபுரம் அட்வகேட் அசோசியேஷன்,காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேஷன் ஆகிய 3 சங்கங்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு புதியதாக அமுல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களையும் முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வழக்குரைஞர்கள் பலரும் கையில் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments