சாலாக்கம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை - நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக புகார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தை அடுத்த சாலவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து அறுவடை செய்யவுள்ள நிலையில் இருக்கும் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக கிராம மக்கள் ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் திங்கள்கிழமை புகார் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான ஆலப்பாக்கம்,குரும்பிறை,நெல்லிமேடு,மாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அதிகமாகி கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.இவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்வெளிகளில் இறங்கி நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இவை சாலைகளில் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வருகிறது.எனவே விவசாயத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம்.மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளின் தொல்லையிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடுமாறும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
No comments
Thank you for your comments