Breaking News

ஜூடோ போட்டியில் காஞ்சிபுரம் மாணவி தேசிய அளவில் சாதனை


படவிளக்கம்: மாணவி மதுபாரதிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிடும் பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்(வலது) ஹேமலதா(இடது) உடற்கல்வி இயக்குநர் வேங்கடபவன குமாரி

காஞ்சிபுரம், ஜூன் 28:

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த ஜூடோ போட்டியில் காஞ்சிபுரம் அரசுப்பள்ளி மாணவி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தமைக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை பாராட்டினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இம்மாதம் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நவீன ஜப்பானிய தற்காப்புக் கலையான ஜூடோ விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரத்திலிருந்து சாய் ஜூடோ அகாதெமி சார்பில் பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மதுபாராதி(14) கலந்து கொண்டார்.

இவர் தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் பெற்று 3 வது இடத்தை பெற்றார். தமிழகத்துக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும், படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்ததாக இவரது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேலதா இவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் வேங்கடபவன குமாரியும் உடன் இருந்தார்.


No comments

Thank you for your comments