Breaking News

காஞ்சிபுரத்திலிருந்து தினசரி நாகப்பட்டிணம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரத்திலிருந்து தினசரி நாகப்பட்டிணம் மற்றும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ராஜசேகர் சனிக்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பிரபலமான பல கோயில்களுக்கு பக்தர்களும்,பொதுமக்களும் சென்று வர வசதியாக காஞ்சிபுரத்தில் இருந்து நாகப்பட்டிணத்துக்கும்,வேளாங்கண்ணிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இரவு 9 மணிக்கு புறப்படும்.வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி,கடலூர், சிதம்பரம், சீர்காழி,திருக்கடையூர், காரைக்கால், நாகூர், நாகப்பட்டிணம் வேளாங்கண்ணி சென்றடையும்.இந்த பேருந்து திருநள்ளார்,சிக்கல்,திருவாரூர் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கும் செல்லும் வகையில் இணைப்பு பேருந்தாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டிணம் செல்லும் சிறப்பு பேருந்து தினசரி காஞ்சிபுரத்திலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும். இப்பேருந்து நாகூர்,காரைக்கால்,திருக்கடையூர்,சீர்காழி,சிதம்பரம்,கடலூர்,புதுச்சேரி,திண்டிவனம்,வந்தவாசி வழியாக செல்லும். 

இந்தப் பேருந்து திருப்பதி, திருத்தணி, திருவாலாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்தலங்களை இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்தாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

கோயில் திருவிழாக்களுக்கும், ஆலயங்களுக்கும் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பேருந்து வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமேலாளர் ராஜசேகர் கேட்டுக் கொண்டார்.

No comments

Thank you for your comments