காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லை - மாமன்ற உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார்
காஞ்சிபுரம், ஜூன் 7:
காஞ்சிபுரம் மேயராக செயல்பட்டு வரும் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லை என்றும் பெரும்பான்மையை நிருபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யுமாறும் மாமன்ற உறுப்பினர்கள் 35 பேர் மாவட்ட ஆட்சியர் மகாலட்சுமி யுவராஜை சந்தித்து வெள்ளிக்கிழமை புகார் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டாவர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களில் திமுக உட்பட அனைத்துக்கட்சியையும் சேர்ந்த 35 உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பது.
மேயரின் கணவர் ஆர்.யுவராஜ் எங்கள் வார்டு பகுதிகளில் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பணம் பெறுவதாக பொதுமக்கள் எங்களிடம் புகார் தெரிவித்தனர்.இது குறித்து மேயரிடம் தெரிவித்த போது அவரது கணவரை கண்டிக்காமல் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.
இதிலிருந்து அவர் மேயரின் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் எனவும் தெரிய வருகிறது.எங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி குறைகளை சரி செய்ய முற்படும் போது அதிகாரிகளிடம் அக்குறைகளை சரி செய்ய வேண்டாம் என்றும் கூறி விடுகிறார். இதனால் எங்கள் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகள்,குடிநீர் பிரச்சினைகள் உட்பட எந்தப் பிரச்சினையையும் சரி செய்ய முடியவில்லை.
இதே நிலை தொடர்ந்தால் எங்கள் பகுதி மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்பட்டு விடும்.மேயராக தொடர்ந்து செயல்பட்டால் எங்கள் பகுதி மக்களின் பிரச்சினைகளை சரி செய்யவே முடியாமல் போய் விடும்.எனவே மேயரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
அவர் பெரும்பான்மையை நிருபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்டஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments