காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 597 கோரிக்கை மனுக்கள் - உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை
காஞ்சிபுரம், ஜூன் 24:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 597 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து விரைந்து தீர்வு காண ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர நாற்காலியும்,கொடிநாள் நிதி வசூலில் இலக்கினை எட்டிய அரசு அலுவலர்களுக்கு பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments