Breaking News

சட்ட விரோத குடிநீர் இணைப்புகளை துண்டித்திட நடவடிக்கை - காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரம், மே.8:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளை வைத்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

காஞ்சிபுரத்தில் ஊராட்சி,பேரூராட்சி, நகராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளை துண்டித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றை துண்டித்து பறிமுதல் செய்யப்படும். தினசரி குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தவே வீடுகள், திருமண மண்டபங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் இணைப்புகள் பயன்படுத்தியிருந்தால் அதனை துண்டிப்பதோடு அபராதமும் விதிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

கோடைகாலங்களில் வறட்சியினை தவிர்க்கும் பொருட்டு குடிநீர் வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கேட்டுக்கொண்டார்.


No comments

Thank you for your comments