ஆசிய விளையாட்டுப்போட்டியில் 400 மீ ஒட்டம், 3 வது இடம் பிடித்த கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் வாழ்த்து
காஞ்சிபுரம், மே.9:
துபையில் நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டியில் 400 மீ.ஓட்டத்தில் 3 வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர் எஸ்.கார்த்திகேயனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாராட்டினார்.
துபையில் 21 வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பி.காம் 2 வது ஆண்டு பயிலும் மாணவர் எஸ்.கார்த்திகேயன் கலந்து கொண்டு 400 மீ ஓட்டப் பந்தயத்தில் 3 வது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அம்மாணவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா,தடகளப் பயிற்சியாளர் எஸ்.தாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments