திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டுகால சாதனை ஆட்சிக்கு வாழ்த்துகள்.. பாராட்டுகள்..
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக திராவிட மாடல் ஆட்சி எங்கள் பிள்ளைகளுக்கு வழங்கிய பல்வேறு நலத்திட்டங்களை வரவேற்று மகிழ்கிறேன்.. குறிப்பாக நாட்டிற்கே முன்னோடி திட்டமாக திகழும் இல்லம் தேடிக் கல்வி திட்டம்.. சார் எங்க வீட்ல ரெண்டு பேருமே காலைல 7.00மணிக்கே வேலைக்கு போய்ட்றோம்.. சாயுங்காலம் 7 ,, 8 மணிக்குதான் வீட்டுக்கு வறோம்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் எங்க புள்ளைங்க ஸ்கூல் விட்டு வந்ததும் ஊர் சுற்றாமல் .. ஊர் சுற்றும் பழக்கம் சுத்தமா இல்வாமல் இல்லம் தேடிக் கல்வி வகுப்புக்குப் போய் படிச்சிட்டு வராங்க. நாங்களும் அந்த நேரம் வேலைக்குப் போய் வீட்டுக்கு வந்திட்றோம்.. எங்களால எங்க குழந்தைங்கள பார்த்துக்க முடியலியேன்னு இருந்த மனக்கஷ்டம் போன இரண்டரை வருடமாக எங்களுக்கில்லை.
இல்லம் தேடிக்கல்வி எடுக்கும் எங்க ஊர் பசங்க (தன்னார்வலர்கள்) எங்க பசங்கள நல்லா பார்த்துக்கிறாங்க. பள்ளியில் தரும் வீட்டுப் பாடங்களை எல்லாம் இல்லம் தேடிக்கல்வியிலேயே சரியா முடிச்சிட்றாங்க..
இந்த திட்டத்தை கொடுத்த நம்ம CM ஸ்டாலின் ஐயாவுக்குதான் நன்றி சொல்லனும்னு எங்கள் அங்கம்பாக்கம் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கூறியபோது...
மகிழ்ந்துதான் போனேன்..
என் கண் முன்னே முத்துவேல் கருணாநிதி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் பெருந்தலைவர் காமராசர் இவர்களின் ஒட்டு மொத்தக் கலவையாக திகழும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிம்பம் வந்து சென்றதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்..
எங்கள் அங்கம்பாக்கம் பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.சேகர்
No comments
Thank you for your comments