Breaking News

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

கந்தர்வ கோட்டை, ஏப் 25-

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோழகம்பட்டியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த மாடத்தி அம்மாள் பணி ஓய்வு பெற்றதை பாராட்டும் விதமாக பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 


இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார்.  தலைமை ஆசிரியர் பாண்டிய  செல்வி முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.  

இந்நிகழ்வில் பணி நிறைவு பாராட்டு விழா பெறும் ஆசிரியர் மாடத்தி  அம்மாளை வாழ்த்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார், , மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி  வட்டாரத் துணைத் தலைவர் முருகன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், விமல் விஸ்வநாத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

கணித பட்டதாரி ஆசிரியராக மாடத்தி  அம்மாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோழகம் பட்டியில் 17 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 

இங்கு உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் முடிந்த பிறகும் சிறப்பு வகுப்புகள்தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். சோழகம்பட்டியில் தங்கி தன்னுடைய கல்வி பணியை ஆற்றியுள்ளார்.  

ஆசிரியர் பணி ஓய்வு பெறும் நிகழ்வில் பொதுமக்கள் அவருடைய பணியை வெகுவாக பாராட்டுகின்றனர்.  இந்நிகழ்வில் ஏற்புரையை ஆசிரியை மாடத்தி அம்மாள் வழங்கினார்.

No comments

Thank you for your comments