Breaking News

கோயில் திருவிழாவில் நாட்டு வெடிக்குண்டு வெடித்து ஒருவர் பலி - ஒருவர் கவலைகிடம்

 திட்டக்குடி, மார்ச் 9-

திட்டக்குடி அருகே கோயில் திருவிழாவில்  வெடிப்பதற்காக கையில் வைத்திருந்த நாட்டு வெடிகளில்   தவறி தீப்பொறி பட்டு  வெடித்ததில்  ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். 

பெரியசாமி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் சிவராத்திரி முன்னிட்டு  பெருமாள் கோயிலில் காமுட்டா சாமி கும்மிடும்  நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாட்டு வெடிக்கும் போது  அருகே வெடிக்காத வெடி பாக்ஸை பெரியசாமி (55) என்பவர் கையில் வைத்திருந்தார். 

அப்போது தீப்பொறி பட்டு கையில் இருந்த வெடிகள்  ஒரே சமயத்தில் வெடித்ததில் வயிற்றில் தீக்காயம் ஏற்பட்டு குடல் சரிந்து கீழே விழுந்து பெரியசாமி (55)  சம்பவ இடத்திலே இறந்தார். 

அருகில் இருந்த ராமலிங்கம் (65) என்பவர் தீக்காயம் அடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.. 

இறந்த பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

 


No comments

Thank you for your comments