Breaking News

வேப்பூர் அருகே ரேஷன் அரசி கடத்திய 3 பேர் கைது.. வாகனம், அரசி பறிமுதல்

வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர்களை வாகனத்துடன் போலிசார்  மடிக்கி பிடித்தனர்.  1 டன் ரேஷன் அரிசி  பறிமுதல் செய்து  கடத்திய 3 பேரை கைது செய்தனர். 

 திட்டக்குடி, மார்ச் 9-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக வேப்பூர் போலீசார் கிடைத்த தகவலின் பெயரில் பெரியநெசலூர் கிராமத்தில்  TN 32 AZ 4555 என்ற பதிவெண் கொண்ட மகேந்திரா பொலிரோ பிக் அப் வாகனத்தில் 50 கிலோ இடை கொண்ட சுமார் 22 ரேஷன் அரிசி முட்டைகளை விற்பனைக்காக கள்ளக்குறிச்சிக்கு ஏற்றி சென்ற  புரோக்கர் வேப்பூர் தாலுக்கா பெரியநெசலூர் சசிகுமார்(38),   ஆத்தூர் மேரி தெரு சேர்ந்த  ஓட்டுநர் சாமுவேல்(39), ஆத்தூர், சடகோபன் தெருவை சேர்ந்த உதவியாளர் ரமேஷ்(39),  மூன்று நபர்களை உரிமைப் பொருள் பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர்  சந்தோஷ், சிறப்பு உதவி ஆய்வாளர்  ஏழுமலை மற்றும் போலீசார் பிடித்து வேப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து  குடிமை பொருள் பாதுகாப்பு துறை அலுவலகம் கடலூர் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க உள்ளார்கள்.

No comments

Thank you for your comments