Breaking News

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி கூட்டணி வேட்பாளர் (அதிமுக) பெரும்பாக்கம் ராஜசேகரன்   காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் வீ. சோமசுந்தரம் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு அங்கிருந்து ஊர்வலமாக இரட்டை மண்டபம், காமராஜர் வீதி, வள்ளல் பச்சையப்பன் தெரு மற்றும் வழியாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தேர்தல் பொறுப்பாளர் வளர்மதி, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், இதில் அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அமைத்தலைவர் குண்ட வாக்கு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் ( புறநகர்) ஏகாம்பரம் (மாநகர்) மாவட்ட நிர்வாகி சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் தும்பவணம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜ், பகுதி செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ், பாலாஜி , மோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி பின்னர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments